என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் அலுவலகம் தற்கொலை முயற்சி"
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம் நடந்தபோது வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மகள், மகனுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்
மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து மண்ணெண்ணை கேனை கைப்பற்றினர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.
அதில் தீக்குளிக்க முயன்ற வாலிபர், செங்கம் மேல்புதூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு (வயது 30) என்பது தெரிய வந்தது. போலீசாரிடம் சேட்டு கூறியதாவது:-
நான் மெக்கானிக் வேலை செய்து வருகிறேன். என் மனைவி சந்திரகலா, மகள் தீபா, மகன் அரிகிருஷ்ணன். நான், ஆட்டோ மொபைல் வைக்க ரூ.10 லட்சம் கடன் வாங்கினேன்.
கடன் பெறுவதற்கு உதவி செய்வதாக கூறி செங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கடன் பணம் ரூ.10 லட்சத்தையும் என்னிடம் இருந்து காசோலைகளை பெற்று மோசடி செய்து விட்டார்.
நான், ஏற்கனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்காததால் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, மெக்கானிக் சேட்டுவை குடும்பத்துடன் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்